maithriபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற எவர் கனவு கண்டாலும் அதற்காக தனது ஆசிர்வாதமும் அங்கீகாரமும் அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஹிங்குராக்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.பாராளுமன்றத்தின் 113 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்தார்.  பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவை வென்றாலும் அரசியல் யாப்புக்கு அமைய புதிய அரசாங்கத்தை தமது ஆசிர்வாதம் இன்றி ஸ்தாபிக்க முடியாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.