fewr30 வருட யுத்தத்தினால் வீடுகளை இழந்த கிழக்கு மாகாண மக்கள் தமக்கும் இந்திய அரசின் உதவி திட்ட அடிப்படையில் அமைத்துக் கொடுக்கப்படும் பொருத்து வீடுகளை வழங்குமாறு கோரி திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்னால் இன்று கவனயீர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது, 12.00 மணியளவில் கிழக்கு மாகாண ஆளுநரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஓன்றை கையளித்ததுடன் நிறைவடைந்தது. இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் யுத்தத்தினால் வீடுகளை இழந்த 400க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.