pujithaயாழ்ப்பாணம் பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு முறையை பலப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த தினங்களில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்களையடுத்து அங்கு பாதுகாப்பை வலுப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.  அதன்படி சிவில் பாதுகாப்பு சம்பந்தமாக அதிக அவதானம் செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் எந்தவொரு அவசர நிலமையின் போதும் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார் நிலையில் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போதிருக்கின்ற நிலமை சம்பந்தமாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினால் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.