arrestedகுற்றச்செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆறு உறுப்பினர்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். யாழ், கோப்பாய் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரைத் தாக்கி காயப்படுத்திய சம்பவத்துடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டார். ஆவா குழுவின் தலைவர் உள்ளிட்ட மூவரை கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் இன்று காலை கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். அதேபோன்று மட்டக்குளி பகுதியிலிருந்து நேற்றிரவு மற்றுமொரு நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  ஏனைய இரண்டு சந்தேகநபர்களும் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.