sunami mapஇந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இலங்கையின் கரையோர மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் சுமாத்திராவுக்கு அருகில் இன்று (13) முற்பகல் ஏற்பட்ட 6.5 ரிக்டர் அளவிலான நில அதிர்வு காரணமாக அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.எனினும், இந்த சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டமை தொடர்பில் சாதாரணமாக விடுக்கப்பட்ட அறிவிப்பு மாத்திரமே எனவும் பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் அதுபற்றி ஊடகங்களில் அறிவிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து ஊடகங்களின் மூலமாக இந்த விடயம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.