நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வறச்சி காலநிலையால் குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுதவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரண்ட காலநிலையால் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இதே நேரம் மலையகப் பகுதியில் கடும் மழை பொழந்து வரும் அதேநேரம் ஜஸ் மழையும் பெய்துள்ளது.
வரட்சியால், அம்பாறை மாவட்டத்திலுள்ள 11 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு தொடர்ந்தும் பௌஸர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சிக் கால நிலையினால் பாதிக்கப்படுபவர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, நாவிதன்வெளி, தமண, அம்பாறை. மகா-ஓயா, பதியத்தலாவ, உகன, லாகுகல ஆகிய 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள சுமார் 16 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு தொடர்ந்தும் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில், பிரதேச செயலகங்கள் இப்பணியை நடைமுறைப்படுத்தி வருகின்றன. வரட்சிப் பிரதேச மக்களின் தேவைக்கேற்ப பௌஸர் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வரட்சி காரணமாக கிழக்கு மாகாணத்;திலுள்ள சிறிய பெரிய குளங்கள், ஆறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என்பனவற்றின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். வரட்சி காரணமாக காட்டு மிருகங்களும் குடிநீரின்றிப் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய வரட்சிக் காலநிலை தொடர்ந்து நீடிக்குமானால், எதிர்வரும் பெரும்போக நெற் செய்கை வெகுவாகப் பாதிக்கப்படும் என அம்பாறை மாவட்ட விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்தகால வரட்சி காரணமாக இம்முறை அம்பாறை மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட 42 வீதமான காணிகளிலயே நெல் செய்கை பண்ணப்பட்டது. தற்போது அறுவடைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன