varadsiநாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறச்சி காலநிலையால் குருணாகலை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் பாரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுதவிர, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் வரண்ட காலநிலையால் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இதே நேரம் மலையகப் பகுதியில் கடும் மழை பொழந்து வரும் அதேநேரம் ஜஸ் மழையும் பெய்துள்ளது.

வரட்­சியால், அம்­பாறை மாவட்­டத்­தி­லுள்ள 11 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்­கப்­பட்டுள்­ள­தா­கவும், இவர்­களுக்கு தொடர்ந்தும் பௌஸர் மூலம் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­வ­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரி­வித்தார். 

அம்­பாறை மாவட்­டத்தில் தற்­போது நிலவும் வரட்சிக் கால நிலை­யினால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களின் தொகை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கின்­றது. தற்­போது பொத்­துவில், திருக்­கோவில், ஆலை­ய­டி­வேம்பு, அக்­க­ரைப்­பற்று, நாவி­தன்­வெளி, தமண, அம்­பாறை. மகா-­ஓயா, பதி­யத்­த­லாவ, உகன, லாகு­கல ஆகிய 11 பிர­தேச செய­லாளர் பிரி­வு­க­ளி­லுள்ள சுமார் 16 ஆயிரம் குடும்­பங்­களைச் சேர்ந்த மொத்தம் 50 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார். 

பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்­க­ளுக்கு தொடர்ந்தும் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றது.

 அனர்த்த முகா­மைத்­துவ      அமைச்சின் நிதி ஒதுக்­கீட்டில், பிர­தேச செய­ல­கங்கள் இப்­ப­ணியை நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றன. வரட்சிப் பிர­தேச மக்­களின் தேவைக்­கேற்ப பௌஸர் மூலம் குடிநீர் விநி­யோ­கிக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.   

இதே­வேளை, வரட்சி கார­ண­மாக கிழக்கு மாகாணத்;திலுள்ள சிறிய பெரிய குளங்கள், ஆறுகள், ஏரிகள், நீர்­நி­லைகள் என்­ப­ன­வற்றின் நீர்­மட்டம் வெகு­வாகக் குறைந்து வரு­வ­தாக அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கின்­றனர். வரட்சி கார­ண­மாக காட்டு மிரு­கங்­களும் குடி­நீ­ரின்றிப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. 

தற்­போ­தைய வரட்சிக் கால­நிலை தொடர்ந்து நீடிக்­கு­மானால், எதிர்­வரும் பெரும்­போக நெற் செய்கை வெகு­வாகப் பாதிக்­கப்­படும் என அம்­பாறை மாவட்ட விவ­சா­யிகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். கடந்­த­கால வரட்சி காரணமாக இம்முறை அம்பாறை மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட 42 வீதமான காணிகளிலயே நெல் செய்கை பண்ணப்பட்டது. தற்போது அறுவடைப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன