sdfsdfsdவவுனியா தாண்டிகுளம் தொடருந்துக் கடவையை பாதுகாப்பான தொடருந்துக் கடவை ஆக்கக் கோரியும் நேற்றுமாலை குறித்த கடவையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததை கண்டித்தும் இன்றுகாலை தொடருந்தை மறித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி தொடருந்து காலை 8.20 மணிக்கு தாண்டிக்குளம் கடவையில் சிவப்பு கொடி காண்பித்து மறிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பொலிஸாரின் தலையீட்டையடுத்து 10 நிமிடங்களின் பின் தொடருந்து பயணத்தைத் தொடர போராட்டக்காரர்கள் அனுமதித்துள்ளனர்.