ootrupulamகிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள ஊற்றுப்புலம் ஒடுக்குப் பாலம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த ஊற்றுப்புலம் ஓடுக்கு பாலம் ஆயிரம் பாலம் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதோ அல்லது தற்போது ஆரம்பிக்கப்பட்ட புதிய திட்டமோ அல்ல கடந்த சில வருடங்களுக்கு முன் ஐக்கிய இராச்சியத்தின் நிதியுதவியுடன் முன்னைய அரசின் காலத்தில் குறித்த பாலம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இடையில் ஏற்பட்ட பருவ மழை காரணமாக எட்டு மாதங்களாக கட்டுமானப்பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 33 மீற்றர் நீளமும் 4.2 மீற்றர் அகலமுடைய குறித்த பாலத்தின் கொன்கிறீட் பணிகளுக்கு 35 மில்லியன் ரூபாவும், இரும்பு பாலத்திற்கு 55 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவுப்பெறும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.