strevil chinnaiyaபுதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதியாக இருந்த ட்ரெவிஸ் சின்னையாவிற்கு, ஜனாதிபதியால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ரியர் அட்மிரல் சின்னையா 1982ம் ஆண்டு கடற்படை சேவையில் இணைந்துக் கொண்டார். புலிகளுக்கு எதிராக யுத்தக் காலத்தில் செயற்பட்ட சிரேஷ்ட கடற்படை அதிகாரியாகவும் இவர் இருந்துள்ளார். இலங்கை கடற்படையின் சிரேஷ்ட உறுப்பினரான இவர், 21ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இலங்கை கடற்படையின் தளபதியாக இருந்த ரவீந்தர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.