frontவவுனியாவில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் சார்பான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நேற்று (17.08.2017) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் செயலாளர் திரு சு.காண்டீபன் தலைமையில் வவுனியா பாலமோட்டை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் வாழ்வாதார உதவி லண்டனில் வசிக்கும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணி உறுப்பினர் திரு எ.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் அவரின் தந்தை அமரர் திரு.சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் ஐயா அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.
மேற்படி வாழ்வாதார உதவியினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும், புளொட் அமைப்பின் வவுனியா முன்னாள் நகர சபை உறுப்பினர் திரு பார்த்தீபன், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு.லம்போதரன், ஆசிரியர் திரு சுதர்சன், பாலமோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் திரு சுகுமார், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணியின் பொருளாளர் திரு த.நிகேதன்,

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) இளைஞரணி மற்றும் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் திரு வ.பிரதீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் திரு பி.கெர்சோன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்(புளொட்) இளைஞரணின் உறுப்பினர்களான திரு. கஜீபன், திரு. இந்துஜன், திரு சன்சைன், திரு ரூபன், திரு. லில்ஷென் ஆகியோருடன் கிராம மக்களும் கலந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_9399 IMG_9410 IMG_9414 IMG_9423 IMG_9440 IMG_9445 IMG_9456 IMG_9458 IMG_9484 IMG_9494 IMG_9505 IMG_9510 IMG_9547