police ...குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 08 பேர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அதன்படி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஆர்.எஸ்.ஆர் நாககமுல்ல உள்ளிட்ட 08 பேருக்கு இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களான எச். ஆர். ரவி பீரிஸ், எம்.ஏ.ஈ. மகேந்திர, பி.சி. டி சில்வா, ஜே.ஐ.டி.ஏ. குணதிலக, டி.ஜே. பலிஹக்கார, எஸ்.பி. கலப்பத்தி, டி.எம்.டி.ஜே பிரியலால் ஆகியோருக்கே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.