jeganthan Chief 24.08 (2)வட மாகாண முதலமைச்சர் கௌரவ சீ.வி விக்னேஸ்வரன் அவர்களுக்கும் புளொட் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்றையதினம் வட மாகாணசபை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும், வட மாகாண கால்நடை, விவசாய, நீர் வளங்கள், மீன்பிடி அமைச்சருமான கௌரவ கந்தையா சிவநேசன் அவர்களும் உடனிருந்தார்.இதன்போது முதலமைச்சரின் வெளிநாட்டு விஜயங்கள், அதனால் ஏற்பட்ட பயன்கள் என்பன தொடர்பில் கலந்துரையாடிய எஸ்.ஜெகநாதன் அவர்கள்,  தனது இலங்கை விஜயத்தின்போது பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்ததாகவும், இதன்போது அந்த மக்கள் முதலமைச்சரின் அதீத நம்பிக்கை வைத்துள்ளதை அறியக்கூடியதாக இருந்ததாகவும், எனவே முதலமைச்சரின் சேவை தொடரவேண்டுமென்றும், அதற்கு தாம் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் கூறினார். அத்துடன், வட மாகாண அமைச்சரவை மாற்றத்தின்போது எமது கட்சிக்கு அமைச்சர் பதவி கிடைத்தமையிட்டு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

jeganthan Chief 24.08 (2) jeganthan Chief 24.08 (4)