mahinda desapiriyaதேர்தல் ஆணைக்குழு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்கள் நாளுக்கு நாள் பிற்போடப்படுவது தொடர்பாகவே இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய உள்ளிட்ட மூவரின் கையொப்பங்களுடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என்றும், அரசமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் பார்வை என்ன என்பது குறித்தும் இந்த கடிதத்தில் தெளிவுப் படுத்தப்பட்டுள்ளது என்றும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.