defence seminarபூகோள மற்றும் வலயப் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும், கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு, இன்றும் நாளையும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறுகின்றது.

இதில் சுமார் 700 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இதன்போது, பூகோள வன்முறை பயங்கரவாதம், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்புச் செயற்பாடுகள், பாதுகாப்புப் படைகள் மற்றும் பணிக்குழு சிவில் உறவுகள், மாநில உறவுகள் மற்றும் அதன் பயங்கரவாத வன்முறைகள், கிழக்கு மற்றும் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்புகள், பிராந்திய அமைப்புக்களின் பங்களிப்புகள், ஐக்கிய நாடுகள் மூலோபாயம், ஆகிய தலைப்புக்களில் கருத்தரங்குகள் இடம்பெற ஏற்பாடாகி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.