iiiiஅமரர் அமிர்தலிங்கம் அவர்களின் 90ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை நிகழ்வு அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் யாழ். பொதுநூலக கேட்போர் கூட்டத்தில் எதிர்வரும் 03.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4மணியளவில் வண.கலாநிதி சு.ஜெபநேசன் அவர்களின் தலைமையில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கேற்றல், தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்தல், மௌன அஞ்சலி என்பன இடம்பெற்று தமிழ் தாய் வாழ்த்து இடம்பெறவுள்ளது. தொடர்ந்து ஆசியுரைகளை நல்லை ஆதீன முதல்வர் திருஞானசம்பந்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், யாழ். பெரிய பள்ளிவாசல் மௌலவி ஆகியோர் வழங்கவுள்ளனர். தொடர்ந்து தலைமையுரை, பிரதம விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரை என்பன இடம்பெற்று தொடர்ந்து “இலட்சிய இதயங்களோடு” என்ற நூல் வெளியீடும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.