sfdஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் அலிஸ் வெல்ஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சந்திப்பில் நாட்டின் அரசியல் நிலைமைகள் குறிப்பாக அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட வன்முறைகளினால் தமிழர்கள் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, எங்களது உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.