வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேற்றையதினம் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
மல்வத்து பீட மகாநாயக்கரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாக மல்வத்துபீட மஹாநாயக்கருக்கு முதலமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார். முதலமைச்சருடன் வட மாகாண அமைச்சர்களான ஆனந்தி சசிதரன், கந்தையா சிவநேசன் ஆகியோரும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். வட கிழக்கில் வாழும் பெற்றோர் இல்லாத சிறார்கள், ஆதரவற்ற பெண்கள் சம்பந்தமாகவும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது.