Header image alt text

bavanதேசிய ரீதியில் விவசாய வாரம் எதிர்வரும் 05ம் திகதி ஆரம்பமாகி ஒருவார காலம் அனுஸ்டிக்கப்படவிருக்கும் நிலையிலும், இதனையொட்டி எதிர்வரும் மாதம் 14ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட நிகழ்வொன்று நடைபெறவிருக்கும் நிலையிலும், மாகாணங்களின் விவசாய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்றுபிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சர் ஹரிசன் உள்ளிட்டவர்களும், மாகாண அமைச்சர்களில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் தவிர்ந்த ஏனைய அனைவரும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more

western pc20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று மேல் மாகாண சபையில் 17 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

இதன்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமூலத்திற்கு ஆதரவாக 45 வாக்குகளும் எதிராக 28 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், நால்வர் வாக்களிப்பில் பங்குகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

EPCஇலங்கையிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

இதன்படி, இது தொடர்பான யோசனை இன்றைய மாகாண சபை அமர்வுகளில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 25 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதோடு, எதிராக 8 வாக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

diran sdfsdபர்பேசுவல் ட்ரேசரிங் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ_க்கு, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை வாக்குமூலமளிக்க அவர் ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும். இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஒரு மாதங்களுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 16ம் திகதி முதல் ஒக்டோபர் 16ம் திகதிவரை அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறும், நீதிபதி உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். Read more

kekaliyaஊடகத்துறை முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹீன்கேந்த ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அவரது தனிப்பட்ட தொலைபேசியின் மாதாந்தக் கட்டணத்தை செலுத்த, அரச அச்சக கூட்டுத்தபானத்தின் பணம் பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. Read more

dead.bodyமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்றுகாலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கோவில்போரதீவு முருகன்கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றுமாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்றுள்ளார். Read more

GMOசைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் அறிக்கையை எதிர்த்து நாளை தொடக்கம் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளைய தினத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.

private busதிருகோணமலையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் நேர கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பயணிக்கின்ற அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். Read more

uniformவவுனியா தேக்கவத்தைப் பகுதியில் வீசப்பட்ட நிலையில் இராணுவச்சீருடை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றுகாலை வவுனியா தேக்கவத்தைப் பகுதி 9ஆம் ஒழுங்கையில் விஷேட அதிரடிப்படையினரின் இலச்சினையுடன் இராணுவச்சீருடை இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் இராணுவ சீருடையை மீட்டுள்ளனர். Read more