GMOசைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் அறிக்கையை எதிர்த்து நாளை தொடக்கம் 15ம் திகதி வரை மாவட்ட ரீதியாக ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, நாளைய தினத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மேற்படி சங்கம் தெரிவித்துள்ளது.