diran sdfsdபர்பேசுவல் ட்ரேசரிங் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ_க்கு, பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளது.

இதன்படி, எதிர்வரும் புதன்கிழமை வாக்குமூலமளிக்க அவர் ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டும். இதேவேளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஒரு மாதங்களுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 16ம் திகதி முதல் ஒக்டோபர் 16ம் திகதிவரை அவர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறும், நீதிபதி உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், வழக்கை மீண்டும் ஒக்டோபர் 20ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் யுத்தம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைக்க வழங்கப்பட்ட 200 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்பட்டு டிரானுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.