dead.bodyமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குக்குளாவத்தை வயல் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்றுகாலை 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கோவில்போரதீவு முருகன்கோவில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றுமாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்றுள்ளார். இவர் இரவு வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் இவரை தேடிய நிலையில் குக்குளாவத்தை வயல் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.