private busதிருகோணமலையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் நேர கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது. திருகோணமலையிலிருந்து கொழும்பு, மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட பிரதான நகரங்களுக்கு பயணிக்கின்ற அனைத்து தனியார் பஸ் ஊழியர்களும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர். ஆயினும் உரிய நடைமுறையின் படியே கிழக்கு மாகாணத்தில் இடமாற்றம் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண பொது போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.