electricity board3 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து, நாளை நண்பகல் 12 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், “வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் 48 மணித்தியாலங்களுக்குள் எமக்கு தீர்வு பெற்றுக்கொடுக்காவிடின், எதிர்வரும் 15ஆம் திகதி நண்பகல் 12 மணி முதல் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்போம்” எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. கொழும்பில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.