வட மாகாண விவசாயம், கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் கந்தையா சிவநேசன் அவர்கள், கொக்குளாய் மேற்குப் பிரிவில் மீன்பிடி, விவசாய விடயங்கள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றில் நேற்று ஈடுபட்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலின்போது அத்துமீறிய மீனவர்கள் பிரச்சினை, பயிற்சியற்ற மீனவர்கள் பிரச்சினை, குளம், வாய்க்கால் புனரமைப்பு, விவசாய வீதிகள், பாலங்கள் புனரமைப்பு போன்ற கோரிக்கைகள் மக்களால் முன்வைக்கப்பட்டது.