வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கபட்ட குடும்பத் தலைவரைக் கொண்ட இரு குடும்பங்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும், ஒரு குடும்பத்திற்கு காற்றழுத்த மெத்தையும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்க தலைமை காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி விண்ணப்பத்தை அராலி தெற்கைச் சேர்ந்த ம.நகுலேஸ்வரி மற்றும் யாழ். குருநகரைச் சேர்ந்த அ.மேரிறோஸ் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் வேண்டுகோளாக விடுத்ததுக்கமைய இன்று சங்கத்தின் தலைமை செயலகத்தில் வைத்து பயனாளிகளிடம் அவை கையளிக்கபட்டுள்ளன. துவிச்சக்கரவண்டியை கனடாவில் வசிக்கும் ஜெயராயன் அவர்களும், காற்றழுத்த மெத்தையை வட்டுக்கோட்டையை சேர்ந்த மோகனவரதன் அவர்களும் வழங்கியிருந்தனர். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)