Header image alt text

mexico earth quakeமெக்சிகோ நாட்டில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 119 பேர் வரை பலியாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின. Read more

sdfdsஇலங்கையிலுள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டிமிட்ரி மஹய்லோவஸ்கி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை கடற்படை தலைமையகத்தில் நேற்று சந்தித்துள்ளார்.

கடற்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்த பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பு மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டார். இச் சந்திப்பில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. Read more

crime sceneயாழ்ப்பாணம் நல்லூர் வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நாவலர் வீதிப் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனுமே தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது, 38வயதான செல்வநாயகம் ரத்னபாலசிங்கம் என்பவர் பலியாகியுள்ளதோடு, அவரது மகனான ரத்னபாலசிங்கம் ரஜீவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more

yogeswaranஅரசியலமைப்பின் 20வது திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள பங்களாளிக் கட்சிகளிடையே தீர்க்கமான முடிவில்லாத காரணத்தினால் தான், கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். 

இந்த குழப்பத்தின் வெளிப்பாடுதான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அறுதிப் பெரும்பான்மை கொண்ட வட மாகாண சபையினால் நிராகரிக்கப்பட்ட 20வது திருத்த சட்டத்தை கிழக்கு மாகாண சபையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரித்துள்ளார்கள் என்றும் அவர் கூறினார். Read more

hisbullaகிழக்கின் முதலமைச்சராக சிங்களவர் ஒருவர் வரவேண்டும் என நான் வலியுறுத்தியதாக அப்பட்டமான பொய் பிரசாரமொன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வடகிழக்கு இணைப்புக்கு எதிராக தான் கருத்துத்தெரிவித்து வருவதால் இவ்வாறான பொய்யான தகவல்களைப் பரப்பிஇ மக்களை குழப்பி தனக்கெதிராக சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று புதன்கிழமை இது தொடர்பில் வெளியிட்ட விசேட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது. Read more