crime sceneயாழ்ப்பாணம் நல்லூர் வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார். நேற்று இரவு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நாவலர் வீதிப் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனுமே தாக்கப்பட்டுள்ளனர். இதன்போது, 38வயதான செல்வநாயகம் ரத்னபாலசிங்கம் என்பவர் பலியாகியுள்ளதோடு, அவரது மகனான ரத்னபாலசிங்கம் ரஜீவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட காரணங்களே தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.