Header image alt text

sfdsfdsdfds(எம்.எம்.மின்ஹாஜ்)

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டமையினால் சபைக்குச் சமூகமளிக்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேடிய சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரளிப்பதில்லை என்று கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எ.எவ், புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்திருந்தனர். இந்த நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் செயலாளரும் உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் சட்டமூலத்திற்கு எதிராக பேசிவிட்டு சபையில் இருந்து வெளியேறியிருந்தார். இதேபோன்று புளொட் அமைப்பின் உறுப்பினர் வியாழேந்திரனும் வாக்கெடுப்பில் பங்கேற்பதில்லை என்ற முடிவை எடுத்தார்.
Read more

gmoஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

சைட்டம் தனியார் மருத்துவக்கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகளால் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தூரப்பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைகளுக்கு செல்லும் நோயாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். Read more

colomboகொழும்பு கொம்பனிவீதியில் உள்ள ஆறு மாடிக் கட்டடம் ஒன்று திடீரென அதிர்ந்ததையடுத்து, அதில் தங்கியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டத்தை அடுத்துள்ள பகுதியில் நிலத்தடி மின்கம்பிகளைப் பதிக்கும் பணிகளுக்காக நிலம் தோண்டப்பட்டதே கட்டடம் அதிர்ந்ததற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. எனினும், வேறேதும் காரணங்களால் கட்டடம் அதிர்ந்திருக்கலாமா என்று கண்டறிவதற்காக, தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பினரும், பேரிடர் முகாமைத்துவ நிலைய அதிகாரிகளும உடனடியாக கொம்பனிவீதிக்குச் சென்று குறித்த கட்டடத்தில் ஆய்வு நடத்தியுள்ளனர்.

image_948f8f471aகொழும்பு, புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால், அப்பகுதியிலிருந்த ஏனைய 16 வர்த்தக நிலையங்களும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

குறித்த தீயினை கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு, தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து, தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. Read more

savukadi murdersமட்டக்களப்பு சவுக்கடி கிராமத்தில் 33 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 27வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று புதன்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1990ம் ஆண்டு புரட்டாதி 20ம் திகதி சவுக்கடி மற்றும் ஆறமுகத்தான் குடியிருப்பு கிராமங்களைச் சேர்ந்த 33 தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடைபெற்று 27 ஆண்டுகள் கடந்த நிலையில் அவர்களது உறவினர்களினால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. Read more

myanmar Protes jaffnaவடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மியன்மார் படுகொலைகளை நிறுத்தக் கோரி இன்று காலை யாழில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

யாழ் கோவில் வீதியின் கைலாச பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று முற்பகல் 11மணிக்கு இப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் இணைந்து முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலானோர் கலந்து கொண்டிருத்தனர். Read more

strikeஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 08.00 மணி முதல், நாடளாவிய ரீதியில், 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

மேலும், இவர்களுடன் வேறு சில சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

deportedசட்டவிரோதமான படகின் மூலமாக நியூசிலாந்துக்கு செல்வதற்காக, தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28 பேர், இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் தங்கியிருந்த நிலையிலேயே, நாட்டுக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். Read more

akkarai villageயாழ். வலிகாமம் மேற்கு, இடைக்காடு, அக்கரை கிராம மக்களின் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அக்கரை கடற்கரைப் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியை மூடுமாறு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அக்கரை கடற்கரை சுற்றுலா மையம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது. Read more

parliamentமாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நேற்றையதினம் மாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 37 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.