image_948f8f471aகொழும்பு, புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயினால், அப்பகுதியிலிருந்த ஏனைய 16 வர்த்தக நிலையங்களும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

குறித்த தீயினை கொழும்பு நகர சபையின் தீயணைப்பு பிரிவு, தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து, தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அப்பகுதியில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டுள்ளது என, பொலிஸாரின் முதல் கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது. புறக்கோட்டைப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.