deportedசட்டவிரோதமான படகின் மூலமாக நியூசிலாந்துக்கு செல்வதற்காக, தங்கியிருந்த மட்டக்களப்பைச் சேர்ந்த 28 பேர், இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் தங்கியிருந்த நிலையிலேயே, நாட்டுக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்ட அவர்கள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அனைவரையும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் விடுதலைச்செய்யுமாறு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் சிலனி சத்துரந்தி உத்தரவிட்டார். இதேவேளை, பிணையாளர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்கவேண்டும் என்று பிணைகோரிக்கை விடுத்த நீதவான், சந்தேகநபர்களை 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டிருந்தார்.