Header image alt text

(அச்சுவேலி நிருபர்)-

stவலி.கிழக்கு பிரதேச செயலக பிரிவின் மேற்கு எல்லைக் கிராமமாகிய வளலாய் கிராமத்தை ஆக்கிரமிப்புச் செய்து வலி வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்கான எல்லை வரையறை செய்யப்பட்டிருப்பதும் அதனால் வளவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்க அதிபரின் நேரடிக் கவனத்திற்கு கொண்டுவந்து நில அளவைப் படங்கள் மற்றும் பிரதேச செயலக எல்லை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எல்லையை நிர்ணயம் செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தர்ர்த்தன் வலிகிழக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

வலி.கிழக்குப் பிரதேச செயல பிரிவின் உள்ளடங்கலாக வளலாய் கிராமத்தை ஆக்கிரமிப்புச் செய்து வலி வடக்குப் பிரதேச செயலகப் பிரிவின் எல்லை வரையறை செய்திருப்பது, இதன்மூலம் பல வலி.வடக்கு பிரதேச செயலக்ப பிரிவின் பலாலி கிராமத்துக்கு உள்ளே உள்ளீர்ப்புச் செய்திருப்பது அநீதியானது. Read more

manus island refugeesஅவுஸ்திரேலியாவின் நவுறு மற்றும் மானஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 50 அகதிகள், அமெரிக்காவில் குடியேற்றப்படவுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் இதனைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முன்னைய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தினால், அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் 1250 அகதிகளை அமெரிக்கா ஏற்கவுள்ளது. Read more

unicefஇலங்கை அரசாங்கம் சிறார்களுக்கான முன் சிறுவர் பராய அபிவிருத்திக்கான கொள்கைகளை வகுக்குமாறு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் பரிந்துரைத்துள்ளது.

புதிய ஆய்வு அறிக்கை ஒன்றில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. அறிவுசார்ந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இது மிகவும் முக்கியமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

granadeகொழும்பு கொம்பனித்தெரு யூனியன் பிளேஸில் இலங்கைக் காப்புறுதி கூட்டுத்தானத்திற்குச் சொந்தமான வாகன திருத்தும் இடமொன்றில் இருந்து 3 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இன்றுகாலை இந்த கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. குறித்த பகுதிக்கு சிறப்பு காவற்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், குற்றவியல் விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.