housing schemeவடக்கு, கிழக்கில் 50 ஆயிரம் கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டப்பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளன.

குறித்த வீட்டுத் திட்ட பணிகளுக்கான கேள்விப்பத்திரக் கோரல், அச்சு ஊடகங்களின் ஊடாக நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பான திட்ட முன்மொழிவுகள் நிறுவனங்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற பின், அவை குறித்து மதிப்பீட்டுக் குழு ஆராய்ந்து உரிய தரப்பினரை தெரிவுசெய்து பணிகள் முன்னெடுக்கப்படும். இந்த 50 ஆயிரம் வீட்டுத் திட்டத்துக்கான பணிகளை இந்த வருட இறுதிக்கும் ஆரம்பிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.