lalith jayasinga2015 ஆம் ஆண்டு கஹவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை தொடர்பில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட விசாரணை பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் லலித் ஜயசிங்கவை பெல்மதுல்லை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதி அமைச்சர் பிறேமலால் ஜயசேகர உள்ளிட்ட சிலரால் , ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் விசாரணைகளின் போது தகவல்களை மறைத்தமை குறித்து வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று முற்பகல் அவர் அழைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.