trainவடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது. தம்புத்தேகம பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டமையால் வடக்கு மார்க்கத்திலான ரயில் சேவை நேற்று மாலை முதல் தடைப்பட்டது.

நேற்றிரவு 9.45 அளவில் தடம்புரண்ட ரயில் மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்திலான ரயில் சேவையை வழமைக்கு கொண்டுவந்துள்ள போதிலும், ரயில் தடம்புரண்ட பகுதியில் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.