ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக, சுவிஸ் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு. பா.கஜதீபன் அவர்களுக்கும்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களுக்குமிடையிலான சந்திப்பொன்று 24.09.2017 சுவிஸின் Schweighof strasse 296, 8055 Zurich என்னுமிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் சுவிஸ் கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கலந்துரையாடலில் தமிழ் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள், வடமாகாணசபையில் நிலவும் பிரச்சினைகள், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு விடயங்கள் என்பன தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டு, தெளிவான பதில்களும் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபன் அவர்களினால் வழங்கப்பட்டது.