charlesசுங்கத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக பி.எஸ்.எம்.சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராகவும் மேலதிக அரசாங்க அதிபராகவும் உதவி அரசாங்க அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். யாழ். பல்கலைக்கழக பட்டதாரியான இவர் ரஜரட்டை மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பினை மேற்கொண்டவராவார். இதேவேளை, சுங்கத் திணைக்கள பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய டபிள்யூ ஏ.சூலானந்த பெரேரா, அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.