land slideதற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இருக்கின்ற மழைவீழ்ச்சி எதிர்வரும் தினங்களுக்கும் இதேபோன்று தொடருமானால் பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாளுமாறு குறித்த பிரதேச மக்களிடம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.