சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மூவரும் சிறீலங்கா பொதுஜன முன்னணிக்கு தமது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.டீ வீரசிங்க, டீ.எம்.ஜயசேன, சந்ரா தெவரப்பெரும ஆகியோரே இவ்வாறு ஒன்றிணைந்த எதிரணியுடன் இணைந்துள்ளனர். எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் கால எல்லை நிறைவடையவுள்ள கிழக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்காத குறித்த மூவரும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்ததுடன், இதன்போது தாம் சிறீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக கருத்துக்களை வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.