dfsபுத்தளம் – சிலாபம் வீதியில், ஆரம்ப பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் 18பேர் காயமடைந்ததுடன், சிலாப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் உட்பட, மாணவர்களின் பெற்றோர்கள் இதன்போது காயமடைந்துள்ளனர். ராஜங்கனை பிரதேச பாடசாலை ஒன்றின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள், கல்வி சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களின் 4பேர் கவலைக்கிடமாக உள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.