NPCவட மாகாண சபை உறுப்பினர்கள் பதினாறு பேர் அடங்கிய குழுவினர் அடுத்த மாதம் புதுடில்லிக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபை அமர்வின்போது அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசிய நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் பங்கேற்பதற்காகவே அவர்கள் புதுடில்லி பயணமாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.