pasilஇலங்கையில் நடைபெற்ற குற்றங்களை போர்க்குற்றம் எனக் கூற வேண்டாம் என முன்னாள் பொருளாதார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுசன முன்னணியின் தலைவருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் யுத்த மோதல்களின் பின் நடைபெற்ற குற்றங்கள் போர்க் குற்றமல்ல. அதுவொரு சிறுகுற்றமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் போர்க்குற்றங்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றிற்கே அவர் பதிலளித்தார்.

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, போர்க் குற்றத்தில் ஈடுபட்ட படையினரை தண்டிப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளாரே என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, இலங்கையில் நடந்தது போர்க்குற்றமல்ல. அதுவொரு சிறுகுற்றமே நீங்கள் அவற்றை போர்க்குற்றம் எனக் கூறவேண்டாம் என்று தெரிவித்தார்.

பொறுப்பான கதிரைகளில் இருப்பவர்கள் வெளியிடும் வார்த்தைகள் தொடர்பில் கவனமாக இருக்கவேண்டும்.

இதற்கு மேல் இந்த விடயத்தில் தற்போது நான் எதனையும் இவ்விடத்தில் சொல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.