colvinஇலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கொல்வின் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் கடமையாற்றுவதாக சுகாதார அமைச்சர் உயர்மட்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராசியர் காலோ பொன்சேக்கா இதற்கு முன்னர் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கை வைத்திய சபையின் தலைவராக கொல்வின் குணரத்னவை நியமித்தமைக்கு, எதிர்ப்பு தெரிவித்து, வைத்திய சபைக்கு முன்பாக, மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இலங்கை வைத்திய சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொல்வின் குணரத்ன, சைட்டம் நிறுவனத்துக்கு சார்பாக செயற்படும் ஒருவர் என்று காரணம் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில், அடுத்தக்கட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள அதன் உறுப்பினர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தப்போவதாகவும், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவையும் இன்று சந்திக்க இருப்பதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.