ddfdதமிழ் அரசியல் அரசியல் கைதிகள் சகலரையும் உடனடியாக கால தாமதம் இன்றி விடுவிக்க கோரியும், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,

வவுனியா நீதிமன்றில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த போராட்டம் யாழ். பல்கலைகழகம் முன்பாக காலை 10மணி தொடக்கம் 11மணி வரையில் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் சங்கம் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் பங்களிப்புடன் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.