trinco oil tanksதிருகோணமலை எண்ணெய் தாங்கி திட்டத்தினை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீதி, பெற்ரோலிய துறை மற்றும் திருகோணமலை துறைமுக மற்றும் மின்சக்தி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கில், இந்தியாவும் இலங்கையும் இணைந்து தொழிற்படும் குழு ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையே இந்த குழுவின் ஊடாக திருகோணமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும், எனினும், இந்த விடயம் குறித்த இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை எனவும் இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, திருமலையில் உள்ள 99 எண்ணெய் தாங்கிகளில் 15 தாங்கிகள் தற்போது எல்.ஐ.ஓ.சீ நிறுவனத்தினால் உபயோகிக்கப்படுகிறது. ஏனைய தாங்கிகள் குறித்தே இலங்கை இந்தியா இடையே தற்போதைய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.