electric shock deadயாழ்ப்பாணம், தாவடியில் மின்சாரம் தாக்கி குடும்பத் தலைவர் ஒருவர் உயிரிழந்தார். தாவடி பத்திரகாளி கோவிலடியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உதயகுமார் (வயது 54) என்பவரே உயிரிழந்தார். வீட்டு வேலி தகரத்தால் அடைக்கும் பணி இடம்பெற்றது. அந்த வேலியருகே மின் வயர் சென்றுள்ளது. அந்த வயரை வேலித் தகரம் அறுத்துள்ளது. தகரத்தை ஏந்தி நின்ற வீட்டின் உரிமையாளருக்கு மின்சாரம் தாக்கியது. அதனால் அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உடற் கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.  இறப்பு விசாரணையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். விசாரணைகளின் பின் சடலம் நேற்றிரவு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது