image_a240451011மண்சரிவு அனர்த்தம் ஏற்படகூடிய பிரதேசங்களை கண்டறியும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில், இதுவரையிலும் 3,275 இடங்கள் இனங்காணப்பட்டுள்ளன என்றும் அந்த நிறுவகம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு அபாயம் ஏற்படும் என்று இனங்காணப்பட்டுள்ள இடங்களில், 2000 குடும்பங்கள் வாழ்வதாகவும் அந்த நிறுவகம் சுட்டிக்காட்டியுள்ளது.