accidentகண்டி தெல்தெனிய பகுதியில் திகண பிரதேசத்தில் இன்று தனியார் பஸ் ஒன்று குடை சாய்ந்ததில் 2பேர் பலியானதுடன் குறைந்தது 20பேர் காயமடைந்தனர். இதேவேளை களுத்துறை மாவட்டம் மத்துகம, கலவான வீதியிலுள்ள பதுரெலிய மிதலான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 வயதான குழந்தை உயிரிழந்ததுடன் 12க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகினர். வான் ஒன்றும் ஜீப்பொன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டது என, பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்நத 12பேரும், பதுரலிய மற்றும் நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  மேலும், அநுராதபுரம், புத்தளம் வீதியிலுள்ள நிகத்தகமப்பகுதியில் வான் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13க்கு மேற்பட்டோர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.