protestஅநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்.பிரதான பஸ் தரிப்பிட வளாகத்தில் இன்றுகாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து கொண்டிருந்தன. அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகள் 14 ஆவது நாளாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தங்களின் வழ்க்கை அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றியமைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.