rohitha bogollagamaஅதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு காணப்படுகிறது என, அம் மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

20 மற்றும் 30 வயதான இளைஞர், யுவதிகளே இவ்வாறு பாதிக்கப்படுவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.