மண்சரிவு அபாயம் ஏற்பட்டகூடிய ஐந்து மாவட்டங்களில், பாரிய அபாய வலயங்களுக்குள், 2,264 குடும்பங்கள் உள்ளன. அக்குடும்பங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில், தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பதில் ஆணையாளர் பேராசிரியர் காமினி ஜயதிஸ்ஸ, கருத்து தெரிவிக்கையில், “மண்சரிவு அபாய வலயங்கள் தொடர்பிலும், அவற்றுக்கான பரிந்துரைகள் தொடர்பிலான அறிக்கைகள், பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன” என்றார். “அதனடிப்படையில், ஆகக்கூடிய அபாய வலயங்கள், இரத்தினபுரி மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளன. Read more